2013-07-21

மறுதாய்

புரியாமல் இல்லை, அறியாமல் இல்லை,
முடியாமல் தான்
நீ என் அருகிலோ  
நான் உன் அருகிலோ
இருக்க முடியாதினால் தான்,
சில இல்லை பல வேளை
வார்த்தையால் சுடுகின்றேன் நான்!
உன்னை, பின் நீ வாடியதால் என்னை
சுடுகின்றேன் நான் !!

இப்பொழுதும் நம் கன்னம் உரசும்
ஸ்பரிசம் நிழலாடுது என் மனதில்
முழுவதுமாய் கொட்டி தீர்க்க முடியவில்லை என்னால்
இதுதான் பசலை நோய் என்றாரோ அந்நாள்
குறை ஒன்றும் இல்லையே இங்கு
என்று கேட்டால் நிறை ஆவேன் என் உயிர் வந்தால்
என்பது தவிர உரைக்க வேதொன்றும் இல்லை!!

மன்னிக்க வேண்டவில்லை, மண்டி இடவும் மனமில்லை!
எத்துனை நேரம் கையில் வெய்திருந்தாலும்
கீழ் இறக்கி வெய்தவுடன் வீல் என்று
அழும் குழந்தை நானடி !!
நான் அரும் பாடு பட்டு
கண்ட ணைத்த மறுதாய் நீயடி !!!

0 comments:

கருத்துரையிடுக

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Back to top!